ரயிலுடன் மோதிய பாரவூர்தி…!! மூவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி….!!
Published on Saturday, December 15, 2018 | December 15, 2018
குருணாகலை, மெத்தேகம சந்திக்கருகில் உள்ள ரயில் கடவையில் இடம்பெற்ற ரயில் விபத்தொன்றில் மூவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன், பாரவூர்தியொன்று மோதியதிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.நேற்று (வௌ்ளிக்கிழமை) மதியம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த மூவரும் குருணாகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்தில் பாரவூர்தி பாரியளவில் சேதடைந்துள்ளதுடன் ரயிலுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
நண்பர்களுக்கு பகிரவும் :



0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்