Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வாள் வெட்டு பொலிசார் நடவடிக்கை எடுக்க தவறுகின்றனர் பொதுமக்கள் கவலை!

Published on Wednesday, December 5, 2018 | December 05, 2018

வவுனியா வேப்பங்குளம் ஏழாம் ஒழுங்கைக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வாள்வெட்டுக் குழுவொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை அவசர அவசரமாக மூடிவிட்டு தப்பிச் ஓடி சென்றுள்ளனர். இரவு 8.30 முதல் சுமார் ஒரு மணி நேரம் வரை வாள் வெட்டு குழு அட்டகாசத்தில் ஈடுபட்டதுடன் பொதுமக்களையும் அச்சுறுத்தியுள்ளனர். பொலிஸாருக்கு உடனடியாக அறிவித்தபோதும்

பொலிஸார் சம்பவ இடத்திற்கு தாமதித்தே வருகை தந்ததுடன் வாள்வெட்டுக்குழு மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென பாதிக்கப்பட்ட வர்த்தகர்களும் பொதுமக்களும்  விசனம் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாரைக் கண்டதும் வாள்வெட்டுக்குழு தப்பிச் சென்று விட்டது என்றும் ஆனாலும் பொலிஸார் அவர்களை துரத்திப் பிடிக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள்  கூறுகின்றனர்.

இன்று புதன்கிழமை மீண்டும் சம்ப இடத்திற்குச் வந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் வாள்வெட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் வன்முறைகளின் பின்னணியில் இலங்கைப் படையினர் செயற்படுவதாக பொது மக்கள் ஏற்கனவே குற்றம் சுமத்தி வருகின்றனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சிறீதரன் இலங்கை நாடாளுமன்றத்திலும் வாள்வெட்டுக்குழுக்களின் வன்முறைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved