சுமார் 25 அடி நீளமான திமிங்கலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ் கீரிமலை கடற்கரையில் கரையொதுங்கிய இராட்சத விலங்கு.
Published on Monday, November 26, 2018 | November 26, 2018
யாழ் கீரிமலைப் பகுதியில் மிகப் பாரிய விலங்கு ஒன்று கடற்கரையில் ஒதுங்கியதால் அப்பகுதி பரபரப்புக்குள்ளாகியது.இதன் பின்னர் அங்கு விரைந்து வந்த பாதுகாப்புப்படையைச் சேர்ந்தவர்கள் அது இறந்த திமிங்கிலம் என்பதை மக்களுக்கு தெரிவித்துள்ளனர்.
சுமார் 25 அடி நீளமான திமிங்கலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த திமிங்கிலத்தை அப்பகுதியிலிருந்து அகற்றுவதற்கு வலி.வடக்கு பிரதேசசபையினர் முயற்சி செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த இராட்சத திமிங்கிலத்தை பார்வையிட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கீரிமலை கடற்கரைப் பகுதிக்கு விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 25 அடி நீளமான திமிங்கலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நண்பர்களுக்கு பகிரவும் :



0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்