இந்த சம்பவம் இன்று முற்பகல் 10.30 அளவில் இடம்பெற்றுள்ளதாத காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
சம்பவத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களே உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
யாழ்ப்பாணம் – எழுவில் பகுதியைச் சேர்ந்த 25 வயதான செல்வரத்னம் டிஷான், யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயதான சரவணபவன் கோபிஷான் மற்றும் யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதான கோபாலகிருஷ்ணன் சாரங்கன் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்