Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

செட்டிகுளம் முகத்தான்குளம் வான் கதவில் எகிறி குதிக்கின்றது நீர் மட்டம்

Published on Saturday, November 10, 2018 | November 10, 2018

வன்னியில் நெட் களஞ்சியங்களில் ஒன்றான செட்டிகுளம் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால் பல குளங்கள் நிரம்பி வழிகின்றன.



கடந்த சில வருடங்களாக போதியளவு நீர் இன்மையினால் விவசாயிகள் பெரும் சிக்கலை எதிர்நோக்கி இருந்தனர் இவ் அடை மழையினால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழையின் காரணமாக செட்டிக்குளத்தில் பெரிய குளங்களில் ஒன்றான முகத்தான்குளத்தின் நீர் சில நாட்களுக்கு முன் வான் கதவை எட்டி இருந்ததோடு இன்று மூன்று வருடங்களுக்கு பின் வான் பாய்கிறது



கடந்த பல ஆண்டுகளாக மழை நீரை நம்பி விவசாயம் செய்து வரும் செட்டிகுளம் விவசாயிகள் கடந்த மூன்று ஆண்டுகள் நீர் பற்றாக்குறையால் விவசாயத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது ஆனால் இந்த வருடம் போதியளவு மழை கிடைத்துள்ளது  



ஆனால் குளங்களின் நீரை நம்பி பயிர் செய்யும் விவசாயிகள் நீரை வீண் விரயம் செய்யாமல் குளங்களையும், நீர் வடிந்து செல்லும் வாய்க்கால்களையும் புணரமைத்து நீர் முகாமைத்துவத்தை சிறந்த முறையில் கடைப்பிடிப்பதால் மட்டுமே தொடர்ந்து வருகின்ற வறட்சியான காலங்களில் பயிர் செய்ய முடியும் என எமது செய்திச் சேவை மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved