இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா செட்டிகுளம் வீரபுரம் பகுதியில் வசித்து வரும் ஜெயராஜ் நிஷாந்தினி என்ற 19 வயதுடைய யுவதி ஒருவர் நேற்றுக்காலை 10மணியளவில் வீட்டிலிருந்து வவுனியாவிற்கு வேலை தேடிச் செல்வதாகத் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததையடுத்து நேற்று இரவு 11மணியளவில் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் அவரது தந்தை ஜெயராஜ் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
முறைப்பாட்டினை பெற்றுக்கொண்ட பொலிஸார் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.



0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்