யாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
Published on Thursday, November 15, 2018 | November 15, 2018
யாழ்ப்பாணம் அரியாலை நெளுக்குளம் ரயில் கடவை பகுதியில் ரயிலுடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று வியாழக்கிழமை நண்பகல் 12.45 மணியளவில் பயணித்த கடுகதி புகையிரதத்துடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது இதன்போது சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு வீசப்பட்டு விபத்துக்குள்ளானது இவ்விபத்தில் ஜாழ் அளவெட்டி கும்பிழாவளை பிள்ளையார் கோவில் பகுதியைபகுதியை சேர்ந்த ஜெகநாதன் வயது நாற்பது என்று குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
உயிரிழந்தவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் இதேவேளை இச் சம்பவத்துடன் 16 விபத்து சம்பவங்கள் குறித்த பகுதியில் இடம் பெற்றுள்ளன புகையிரத கடவையில் சமிச்ஞை விளக்கு பொருத்தப்பட்டிருந்த போதும் பாதுகாப்பு வேலி அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
நண்பர்களுக்கு பகிரவும் :



0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்