
நீண்ட நாட்களாக எமது பிரதேசத்தில் ஆடு,மாடுகள் காணாமல் போவது வழமை ஆகியுள்ளது.இதைக் கண்டு பிடிக்கும் நோக்கத்துடன் பலர் செயற்பட்டாலும் காணாமல் போதல் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டே இருக்கிறது.
இன்று ஒருவர் தனது சொகுசு வாகனத்தில்
ஓர் ஆட்டை களவாடி செல்லும்போது கையும் களவுமாக போலீசாரிடம் மாட்டிக் கொண்டார்.
அவரிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது செட்டிகுளம் முசல்குத்தி வீதியில் உள்ள நபர் ஒருவருடைய ஆட்டை அதன் மேய்ச்சல் இடத்திலிருந்து பிடித்துக்கொண்டு வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் இவர் செட்டிகுளம் பிரதேசத்திலுள்ள ஆண்டியா புளியங்குளத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இவர் களவாடிய ஆடும் அதைக் கொண்டு செல்ல பயன்படுத்திய சொகுசு வாகனமும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக
எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்





0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்