Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

பிறந்த நாளில் காதலனால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட மாணவி….!! இலங்கையில் நடந்த கொடூரம்…!!

Published on Saturday, October 20, 2018 | October 20, 2018

பிறந்த நாளில் பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த மாணவனை பொலிஸார் தேடி வருகின்றனர்.காதல் தொடர்பில் இருந்த மாணவியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தம்பல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.15 வயதான மாணவியின் பிறந்த நாள் அன்று, அவரை கதிர்காமத்தில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து சென்ற மாணவன் அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவி பிறந்த நாள் அன்று பாடசாலைக்கு செல்வதாக வீட்டில் இருந்து சென்றுள்ளார். எனினும் அவர் பாடசாலைக்கு செல்லாமல் காதலனுடன் கதிர்காமத்திற்கு சென்றுள்ளார்.

காதலியை குறித்த மாணவன் கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள விடுதிக்கு அழைத்து சென்று அவரை துஷ்பிரயோகம் செய்துவிட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.எனினும், சம்பவம் தொடர்பில் மாணவி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து தாய் தம்பகல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட இளைஞனை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved